பிரதமர் அலுவலகம்

உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 21 AUG 2024 9:33AM by PIB Chennai

உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“இந்த சாதனைக்காக, அதுவும் இரண்டாவது முறை அந்த இடத்தை அடைந்ததற்காக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு @DasShaktikanta வாழ்த்துக்கள். இந்திய ரிசர்வ் வங்கியில் அவரது தலைமைத்துவத்திற்கும், பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கிய அவரது பணிகளுக்கும் இது அங்கீகாரமாகும்.”

 

 

***



(Release ID: 2047125)

SMB/RR/KR

 



(Release ID: 2047168) Visitor Counter : 44