நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்குவதற்கான திட்டம்

प्रविष्टि तिथि: 23 JUL 2024 1:04PM by PIB Chennai

பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்குவதற்கு அரசு விரிவான திட்டத்தை தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் ஒருகோடி இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்குவதாக இந்த திட்டம் இருக்கும் என்று தமது பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்தார்.  நிகழ்நிலை வணிகச் சூழல், மாறுபட்ட தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் 12 மாத பயிற்சி பெறுவார்கள்.

இந்த இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6,000 என்பதுடன் மாதந்தோறும் அனுபவ பயிற்சிப் படியாக ரூ.5,000 வழங்கப்படும்.  இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவு ஏற்பதுடன் அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து செலவிடும் என்று எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035591

***

SMB/KV/KR

 


(रिलीज़ आईडी: 2035810) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam