பிரதமர் அலுவலகம்

கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு பின்னணிகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா மாறியுள்ளது: பிரதமர்

Posted On: 21 JUN 2024 9:15PM by PIB Chennai

10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து யோகா பயிற்சி செய்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். யோகாவைப் பிரபலப்படுத்தப் பாடுபடும் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடக எகஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது :

"10 வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து யோகா பயிற்சி செய்ததற்கு நன்றி. கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு பின்னணிகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா மாறியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. யோகக்கலைகளில் இளைஞர்கள் இத்தனை உற்சாகத்தோடும், அர்ப்பணிப்போடும் பங்கேற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்.

யோகாவை பிரபலப்படுத்த பாடுபடும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சிகள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த பெரிய அளவில் பங்களிக்கும். யோகாசனம் பயில ஊக்கமளிக்கும் யோகா பயிற்றுவிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் காலங்களில் யோகா உலகை ஒன்றிணைக்கட்டும்." 

************** 

ANU/SMB/PLM/KV
 



(Release ID: 2027873) Visitor Counter : 23