சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சராக திரு பூபேந்தர் யாதவ் பொறுப்பேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2024 4:42PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சராக திரு பூபேந்தர் யாதவ் இன்று பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்க வருகை தந்தபோது, இத்துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன்  மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் இணையமைச்சராக திரு கீர்த்திவர்தன் சிங்கும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு பூபேந்தர் யாதவ், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை போன்ற இயக்க முன்முயற்சிகள் மீது கவனம் செலுத்துவது தொடரும் என்றார்.  சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்பது மனம்போன போக்கில் நுகர்வு என்பதைவிட, மன நிறைவான நுகர்வு என்பதை பின்பற்றுவது என்று அவர் கூறினார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் திரு பூபேந்தர் யாதவ் ஆலோசனை நடத்தினார்.

***

 

SRI/SMB/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2024400) வருகையாளர் எண்ணிக்கை : 151