பிரதமர் அலுவலகம்

சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் திரு சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவைக்குக் குடியரசுத்தலைவர் நியமித்ததற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 30 JAN 2024 1:20PM by PIB Chennai

சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் திரு. சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவைக்குக் குடியரசுத்தலைவர் நியமித்திருப்பது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"திரு சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்னம் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளராகவும், சமூக சேவகராகவும் தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறார். அடித்தளத்தில் உள்ள மக்களுக்குப் பல்வேறு வழிகளில் அவர் சேவை செய்து வருகிறார். எப்போதுமே தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்தியப் புலம்பெயர்ந்தோருடனும் பணியாற்றியுள்ளார். அவரது நாடாளுமன்றப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மாநிலங்களவை நடவடிக்கைகள் அவரது கருத்துக்களால் வளம் பெறும் என்று நம்புகிறேன். @satnamsandhuchd"

----

(Release ID: 2000539)

ANU/SMB/BS/KPG/RR



(Release ID: 2000599) Visitor Counter : 74