மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2024 ஜனவரி 29, அன்று பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் 7 வது பதிப்பிற்கான ஏற்பாடுகளை திரு.தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்தார்
Posted On:
27 JAN 2024 2:25PM by PIB Chennai
தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024 க்கான முன்னேற்பாடுகளை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார்.
தேர்வு குறித்த கலந்துரையாடல் என்பது வருடாந்திர நிகழ்வாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட திரு. பிரதான், தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பதற்றத்திலிருந்து மீண்டு தங்களால் இயன்ற பங்களிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்றார்.
இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நிகழ்வான தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடனான கலந்துரையாடல் குறித்து ஒவ்வொருவரிடமும் நிலவும் உற்சாகத்தை அவர் வெளிப்படுத்தினார்.
"தேர்வு குறித்த கலந்துரையாடல்" என்பது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒரு தனித்துவமான முயற்சியாகும், இது தேர்வுகளுடன் தொடர்புடைய மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதற்கும், வாழ்க்கையை நோக்கி ஒரு கொண்டாட்டமான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கும், 'தேர்வு வீரர்கள் ' என்ற பெரிய இயக்கத்துடன் இணைந்துள்ளது.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வு குறித்த கலந்துரையாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, நான்காவது பதிப்பு ஆன்லைனில் நடைபெற்றது, அதே நேரத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது பதிப்புகள் டவுன்-ஹால் வடிவத்திற்குத் திரும்பியது. கடந்த ஆண்டு 31.24 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1.95 லட்சம் பெற்றோர்கள் உற்சாகமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
தற்போதைய 7 வது பதிப்பில் பங்கேற்க மைகவ் இணையதளத்தில் 2.26 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இது நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே பரவலான உற்சாகத்தை எடுத்துக்காட்டுகிறது.
2024 ஜனவரி 29, அன்று, புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள ஐ.டி.பி.ஓ, பாரத் மண்டபத்தில் டவுன்ஹால் வடிவத்தில், சுமார் 3000 பங்கேற்பாளர்கள் பிரதமருடன் கலந்துரையாடுவார்கள்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர், காலா உத்சவ் வெற்றியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் இருந்து நூறு மாணவர்கள் முதல்முறையாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
மைகவ் இணையதளத்தில் 2023 டிசம்பர் 11 முதல் 2024 ஜனவரி 12, வரை இணையவழி கொள்குறி வகையில் போட்டியில் பங்கேற்றவர்கள் சமர்ப்பித்த கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தேர்வு குறித்த கலந்துரையாடல் கிட், பிரதமரின் "தேர்வு வீரர்கள்" புத்தகம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
2024 ஜனவரி 12 முதல் ஜனவரி 23, வரை, மராத்தான் ஓட்டங்கள், இசை மற்றும் மீம் போட்டிகள், நாடகம் மற்றும் மாணவர்-தொகுப்பாளர்-மாணவர்-விருந்தினர் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு பள்ளி அளவிலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன.
2024 ஜனவரி 23, அன்று, 774 மாவட்டங்களில் உள்ள 657 கேந்திரிய வித்யாலயா மற்றும் 122 நவோதயா வித்யாலயாக்களில் "தேர்வு வீரர்கள் " புத்தகத்தில் உள்ள தேர்வு மந்திரங்களை கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்ற ஓவிய போட்டியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஜனவரி 29, 2024 அன்று தேர்வு குறித்த கலந்தூரையாடலில் பங்கேற்க 2.26 கோடிபேர் பதிவு செய்துள்ளனர். எனவே, 7வது பதிப்பு, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது, இந்த நிகழ்வு தேர்வு குறித்த மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதிலும், நேர்மறையான கற்றல் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
*****
ANU/AD/BS/DL
(Release ID: 2000046)
Visitor Counter : 194
Read this release in:
Odia
,
Assamese
,
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Kannada