பிரதமர் அலுவலகம்
150-வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
15 JAN 2024 6:02PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வுத் துறை நமது தேசத்திற்கு ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இத்துறை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்திய வானிலை ஆய்வுத் துறை நமது தேசத்திற்கு ஆற்றிய மகத்தான சேவையின் 150 ஆண்டுகளை இன்று நாம் கொண்டாடுகிறோம். வானிலை முன்னறிவிப்பு முதல் காலநிலை ஆராய்ச்சியை மேம்படுத்துவது வரை, உயிர்களைப் பாதுகாப்பதிலும் சுற்றுச்சூழல் குறித்த நமது புரிதலை மேம்படுத்துவதிலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது”.
**********
ANU/ SMB/PKV/RR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1996528)
வருகையாளர் எண்ணிக்கை : 118
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam