பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற சுஹாஸ் எல் எத்திராஜுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

Posted On: 27 OCT 2023 7:41PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்-4 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சுஹாஸ் எல். எத்திராஜுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்-4 பிரிவில் தங்கம் வென்ற சுஹாஸ் எல் எத்திராஜுக்கு வாழ்த்துக்கள். ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சாதனை அவரது இடைவிடாத முயற்சியையும், ஆர்வத்தையும் அழகாக பிரதிபலிக்கிறது.

***

ANU/SMB/IR/AG/KV
 

 



(Release ID: 1975865) Visitor Counter : 59