பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் போட்டியில் புஷ்பேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 25 OCT 2023 1:26PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் போட்டியில் புஷ்பேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

 

 

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற புஷ்பேந்திர சிங்கிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர்  கூறியிருப்பதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற புஷ்பேந்திர சிங்குக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண செயல்திறன், கவனம்வெற்றி பெறுவதற்கான விருப்பம் ஆகியவை நமது தேசத்திற்கு மிகப்பெரிய மரியாதையைக் கொண்டுவந்துள்ளன."

 

****** 

 

AD/SMB/KRS



(Release ID: 1970799) Visitor Counter : 61