பிரதமர் அலுவலகம்

இந்தியா உலகளாவிய பிரகாசமான இடமாகவும், வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றல் மையமாகவும் திகழ்கிறது : பிரதமர்

Posted On: 11 OCT 2023 8:09AM by PIB Chennai

சர்வதேச செலாவணி நிதியத்தின் வளர்ச்சி முன்னறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா ஓர் உலக அளவில் பிரகாசமான இடமாகவும், வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின்  ஆற்றல் மையமாகவும் திகழ்கிறது என்று கூறியுள்ளார். நமது மக்களின் வலிமை மற்றும் திறமையே இதற்குக் காரணம் என்று திரு. மோடி தெரிவித்துள்ளார்.

வளமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, நமது சீர்திருத்தப் பாதையை மேலும் வலுப்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

"நமது மக்களின் வலிமை மற்றும் திறன்களால், இந்தியா ஓர் உலக அளவில் பிரகாசமான இடமாகவும், வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் ஆற்றல் மையமாகவும்  திகழ்கிறது. வளமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, நமது  சீர்திருத்தப் பாதையை மேலும் வலுப்படுத்துவோம்.

***

ANU/SMB/PKV/AG



(Release ID: 1966536) Visitor Counter : 159