பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அணிக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2023 9:00PM by PIB Chennai

 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சந்து ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நமது ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அணிக்கு பாராட்டுகள். இந்த மகத்தான வெற்றிக்காக தீபிகா பல்லிக்கல் @DipikaPallikal,  ஹரிந்தர் பால் சந்து @sandhu_harinder ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

***

ANU/PKV/BR/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1964929) வருகையாளர் எண்ணிக்கை : 152