பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலுக்கான அதன் அணுகுமுறை குறித்து பிரதமர் தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார்
Posted On:
07 SEP 2023 10:18AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம், மனித நேயத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலுக்கான அதன் அணுகுமுறை, மனித குல முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கூட்டுணர்வை உறுதி செய்வது ஆகியவை குறித்து ஒரு கட்டுரை மூலம் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"தில்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் குறித்தும், மனித நேயத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலை வலுப்படுத்துவது குறித்தும், மனித முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கூட்டு உணர்வை உறுதிப்படுத்தவும் நாம் எவ்வாறு செயல்பட்டோம் என்பது குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்."
***
ANU/AD/PKV/AG/KPG
(Release ID: 1955383)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam