பிரதமர் அலுவலகம்

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்தினருடன் பிரதமர் சந்தித்தார்

Posted On: 31 AUG 2023 9:46PM by PIB Chennai

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று 7, லோக் கல்யாண் மார்கில் (எல்.கே.எம்.-ல்) சந்தித்தார்.

பிரக்ஞானந்தாவின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"இன்று 7, லோக் கல்யாண் மார்கில் (எல்.கே.எம்-ல்) மிகவும் சிறப்புப் பார்வையாளர்கள் இருந்தனர்.

உங்கள் குடும்பத்தினருடன் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. @rpragchess.

ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் உதாரணம் இந்திய இளைஞர்கள் எந்தக் களத்தையும் எவ்வாறு வெல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!"

***

SM/ANU/SMB/RS/KPG



(Release ID: 1954182) Visitor Counter : 129