பிரதமர் அலுவலகம்

'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி' என்ற உணர்வுடன் சமூக ஊடகங்களின் காட்சிப் படத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Posted On: 13 AUG 2023 10:32AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது சமூக ஊடகக் கணக்குகளின்  காட்சிப் படங்களை மூவர்ணக் கொடியாக மாற்றினார்.  'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ #HarGharTiranga உணர்வில் அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கம் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இல்லந்தோறும் மூவர்ணக் கொடி #HarGharTiranga இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடகக் கணக்குகளின்  காட்சிப் படங்களை மாற்றுவதுடன்,  இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவை வழங்குவோம், இது நம் அன்புக்குரிய நாட்டிற்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும்."

**************  

ANU/AP/RB/DL



(Release ID: 1948271) Visitor Counter : 151