பிரதமர் அலுவலகம்

கோட்டயத்தில் பசுமை விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த நிலம் பெறப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 18 APR 2023 10:33AM by PIB Chennai

கோட்டயத்தில் (சபரிமலைக்காக) பசுமை விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இரண்டு ஆயிரத்து இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பெறப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“சுற்றுலாவிற்கும் குறிப்பாக ஆன்மிக சுற்றுலாவிற்கும் மிகச்சிறந்த செய்தி”

***

(Release ID: 1917505)

AD/ES/SG



(Release ID: 1917582) Visitor Counter : 173