பிரதமர் அலுவலகம்
உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், எஃகு துறைக்கு வலு சேர்த்துள்ளதோடு, நம் இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAR 2023 8:12PM by PIB Chennai
தற்சார்பு நிலையை அடைவதற்கு எஃகு மிக முக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், இத்துறைக்கு வலு சேர்த்துள்ளதோடு, நம் இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
சிறப்பு எஃகுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 27 நிறுவனங்களுடன் 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மத்திய எஃகு துறை அமைச்சகம் கையெழுத்திட்ட நிகழ்வு குறித்து மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் தெரிவித்ததாவது:
“தற்சார்பு நிலையை அடைவதற்கு எஃகு மிகவும் அவசியம். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், இத்துறைக்கு வலு சேர்த்துள்ளதோடு, நம் இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கும்.”
----
AD/RB/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1908318)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam