பிரதமர் அலுவலகம்

மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கரில் ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 15 MAR 2023 6:32PM by PIB Chennai

மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் நாடுகளில் ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கரில் ஃப்ரெடி புயலால் ஏற்பட்ட பேரழிவு கவலையளிக்கிறது. புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அதிபர் @லாசரஸ்சக்வேரா, அதிபர் ஃபிலிப் நியுஷி, அதிபர் @ரஜோலினாக்கும், எனது இரங்கல்.  இந்த கடினமான தருணத்தில் இந்தியா உங்களுக்கு உறுதுணையாக உள்ளது."

***

AD/IR/RJ/KPG



(Release ID: 1907271) Visitor Counter : 132