பிரதமர் அலுவலகம்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு ஏஎம் அஹ்மதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 03 MAR 2023 6:12PM by PIB Chennai

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு ஏஎம் அஹ்மதி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

"முன்னாள் தலைமை நீதிபதி திரு ஏஎம் அஹ்மதி ஜி மரணம் அடைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது.  வழக்கறிஞராகவும், நீதிபதியாவும் திறம்பட பணியாற்றியவர் அவர். நமது நீதித்துறையை செயல்திறன்மிக்கதாக மாற்றியதில் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. திரு ஏஎம் அஹ்மதி-யை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது ஆத்மா சாந்தியடையட்டும்."

***

AP/ES/RJ/KPG



(Release ID: 1904039) Visitor Counter : 157