பிரதமர் அலுவலகம்

முன்னாள் ஆளுநர் திரு ஓ பி கோலியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 20 FEB 2023 8:44PM by PIB Chennai

முன்னாள் ஆளுநர் திரு. ஓ.பி.கோலியின் மறைவுக்கு பிரதமர்
திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"திரு ஓ.பி. கோலியின் மறைவால் வேதனை அடைந்தேன். தில்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர், ஆளுநர் என்ற முறையில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அவர் கவனம் செலுத்தினார். கல்வித் துறையிலும் அவர் ஆர்வமாக இருந்தார்.  அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி."

***

(Release ID: 1900852)

SRI/PKV/AG/RR



(Release ID: 1900936) Visitor Counter : 155