பிரதமர் அலுவலகம்

இரண்டாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு லியோ வராத்கருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 17 DEC 2022 10:24PM by PIB Chennai

அயர்லாந்து நாட்டு பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரு லியோ வராத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

 

“அயர்லாந்து நாட்டு பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரு லியோ வராத்கருக்கு நல்வாழ்த்துகள். அயர்லாந்து நாட்டுடனான நமது வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் பல அம்ச ஒத்துழைப்புகளை மிகவும் மதிக்கிறேன். நமது துடிப்பான பொருளாதாரங்களின் முழு திறனை அடைவதற்காக இணைந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன்.”

 

**************

SM/RB/DL



(Release ID: 1884515) Visitor Counter : 132