நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 2022-ன் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,51,718 கோடி

प्रविष्टि तिथि: 01 NOV 2022 12:12PM by PIB Chennai

அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது.

இதன் மூலம், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக  அக்டோபர் 2022 திகழ்கிறது. அதேபோல் ரூ.1.50லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2-வது முறையாகும்.

மேலும், உள்நாட்டு பணப்பரிமாற்றத்திலும், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகபட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ1.4லட்சம் கோடியைத் தாண்டிய 9 மாதங்களில், அக்டோபர் மாதம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

அக்டோபர் 2022க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது.

**************

   

SM/ES/IDS


(रिलीज़ आईडी: 1872650) आगंतुक पटल : 570
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Odia , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu