பிரதமர் அலுவலகம்

2022 செப்டம்பர் 25 அன்று நமோ செயலியில் வினாடி வினா அடிப்படையிலான 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted On: 28 SEP 2022 8:53AM by PIB Chennai

2022 செப்டம்பர் 25 அன்று நமோ செயலியில் வினாடி வினா அடிப்படையிலான 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாத 'மனதின் குரல்' குரல் நிகழ்ச்சி வனவிலங்குகள் முதல் சுற்றுச்சூழல் வரை, கலாச்சாரம் முதல் இந்தியாவின் வளமான வரலாறு வரையிலான தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் திரு.மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“அண்மையில் நடக்கவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சியில், வனவிலங்குகள் முதல் சுற்றுச்சூழல் வரை, கலாச்சாரம் முதல் இந்தியாவின் வளமான வரலாறு வரையிலான தலைப்புகள் இடம்பெற்றிருக்கும். நமோ செயலியில் ஒரு சுவாரஸ்யமான வினாடி வினா இருக்கிறது. அதில் நீங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”.   

                                  **************

(Release ID: 1862748)



(Release ID: 1862828) Visitor Counter : 140