பிரதமர் அலுவலகம்

இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்திற்கு கிடைத்துள்ள வியக்கத்தகு வரவேற்பிற்கு பிரதமர் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்

Posted On: 13 AUG 2022 8:26PM by PIB Chennai

இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்திற்கு கிடைத்துள்ள வியக்கத்தகு வரவேற்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உள்ள மக்கள் பெருமளவில் இதில் பங்கேற்பதைக் காண முடிவதாக பிரதமர் திரு மோடி தெரிவித்தார். http://harghartiranga.com/ என்ற தளத்தில் மூவர்ண கொடியுடனான புகைப்படத்தை பகிருமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்தின் பிரமிப்பூட்டும் காட்சிகளை ட்விட்டர் வாயிலாக பிரதமர் பகிருந்தார்.


**********



(Release ID: 1851716) Visitor Counter : 120