பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரத யாத்திரை விழாவையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2022 9:25AM by PIB Chennai

ரத யாத்திரை விழாவையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அண்மைக்கால மனதின் குரல் நிகழ்விலிருந்து இந்திய கலாச்சாரத்தில் ரத யாத்திரையின் முக்கியத்துவம் பற்றிய தமது கருத்துக்களை கொண்ட வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

     ரத யாத்திரையின் சிறப்பு நாளில் எனது வாழ்த்துக்கள். பகவான் ஜெகன்னாதரின் நிலையான ஆசிர்வாதங்களுக்கு நாம் பிரார்த்திப்போம். நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு நம் அனைவருக்கும் ஆசிகள் கிடைக்கட்டும்.

     “அண்மைக்கால #மனதின் குரல் நிகழ்விலிருந்து இந்திய கலாச்சாரத்தில் ரத யாத்திரையின் முக்கியத்துவம் பற்றி நான் பேசியதை பகிர்ந்துள்ளேன்”.

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1838434) வருகையாளர் எண்ணிக்கை : 222