பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பானில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAY 2022 6:25PM by PIB Chennai

ஜப்பானில் 700-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் இன்று உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவர்களுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, இந்தியா-ஜப்பான் இடையே கலாச்சார ஊக்குவிப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு பங்களிப்பை செய்துவரும் ஜப்பானிய இந்தியவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்களை பிரதமர் சந்தித்துப் பேசினார். ஜப்பானில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் விருதுபெற்றவர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசினார். ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளனர்.

இந்திய சமூகத்தினரின் திறன், தொழிமுனைவோர்திறன், தாய்நாட்டுடனான இணைப்பு ஆகியவற்றுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். சுவாமி விவேகானந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் கருத்துக்களை எடுத்துரைத்த பிரதமர், இந்தியா-ஜப்பான் இடையே ஆழ்ந்த கலாச்சார பிணைப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமூக-பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார். குறிப்பாக, கட்டமைப்பு, ஆளுமை, பசுமை வளர்ச்சி, டிஜிட்டல் புரட்சி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டார். "இந்தியாவுக்கு செல்வோம், இந்தியாவுடன் இணைவோம்" என்ற பிரச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்திய சமூகத்தினருக்கு பிரதமர் அழைப்புவிடுத்தார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1827871) வருகையாளர் எண்ணிக்கை : 202