பிரதமர் அலுவலகம்

தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

Posted On: 11 MAY 2022 9:29AM by PIB Chennai

நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான  பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு  வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி  நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"தேசிய தொழில்நுட்ப தினமாக இன்று நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான  பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு  வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் நாம் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறோம். மிகச்சிறந்த அரசியல் துணிவையும், ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்திய ஒப்பில்லாத அடல் அவர்களின்  தலைமைத்துவத்தை நாம் பெருமையுடன் நினைவுகூர்கிறோம். "

----------



(Release ID: 1824364) Visitor Counter : 123