பிரதமர் அலுவலகம்
கோபன்ஹேகனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர்கள் உரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAY 2022 9:50PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் கோபன்ஹேகனில் உள்ள பெல்லா மையத்தில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்களுக்கு அளிக்கும் கௌரவத்திற்காக அந்நாட்டு பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். சிறந்த வளர்ச்சியை அடைவதற்கான வழிவகைகளை காணுவதற்கு இருநாடுகளும் இணைந்து செயலாற்ற முடியும் என்று கூறியுள்ளார். டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்கள் சிறந்த முறையில் செயலாற்றுவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை குறித்து எடுத்துரைத்த அவர், இருநாடுகளும் இணைந்து மேலும் செயல்படுவதை வரவேற்பதாக கூறினார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1822606)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam