மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 30 MAR 2022 2:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.9,544.50 கோடி செலவாகும். இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

------


(रिलीज़ आईडी: 1811464) आगंतुक पटल : 438
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam