பிரதமர் அலுவலகம்

பிரபல கன்னட எழுத்தாளரும் கவிஞருமான திரு சென்னவீர கனவி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 16 FEB 2022 7:23PM by PIB Chennai

பிரபல கன்னட எழுத்தாளரும், கவிஞருமான திரு சென்னவீர கனவி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

"திரு சென்னவீர கனவியின் கம்பீரமான கவிதை மற்றும் எழுத்துக்கள் பல தசாப்தங்களாக கன்னட இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளன. அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி."

***************



(Release ID: 1798982) Visitor Counter : 128