பிரதமர் அலுவலகம்

பிரபல தொல்லியல் ஆய்வாளர் திரு.ஆர்.நாகசுவாமியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 23 JAN 2022 8:59PM by PIB Chennai

பிரபல தொல்லியல் ஆய்வாளர் திரு.ஆர்.நாகசுவாமியின் மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் துடிப்புமிக்க கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதில் அவரின் பங்களிப்பைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“தமிழகத்தின் துடிப்புமிக்க கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதில் திரு.ஆர்.நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். வரலாறு  மற்றும் தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***



(Release ID: 1792079) Visitor Counter : 156