பிரதமர் அலுவலகம்
“தேர்வுக்கு தயாராவோம் 2022” நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் அழைப்பு
Posted On:
15 JAN 2022 7:53PM by PIB Chennai
“தேர்வுக்கு தயாராவோம் 2022” குறித்து டுவிட் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நமது ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சவால்கள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும் இது அவருக்கு வாய்ப்பளிக்கிறது என்று அவர் கூறினார்.
“பரீட்சைகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன, ஆகையால் ‘தேர்வுக்கு தயாராவோம் 2022’ நிகழ்ச்சியும் நெருங்குகிறது. மன அழுத்தமில்லாத தேர்வுகளைப் பற்றி பேசுவோம், மீண்டும் ஒருமுறை நமது துணிச்சலான தேர்வு வீரர்கள் #ExamWarriors, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்போம். இந்த ஆண்டிற்கான ‘தேர்வுக்கு தயாராவோம் 2022’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில், ‘பரிக்ஷா பே சர்ச்சா’ ஒரு அருமையான கற்றல் அனுபவம். நமது ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சவால்கள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைகிறது. கல்வி உலகில் மாறிவரும் நடைமுறைகளை கண்டறியவும் இது வாய்ப்பளிக்கிறது. #PPC2022.”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
****
(Release ID: 1790290)
Visitor Counter : 222
Read this release in:
Assamese
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam