பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழை குறித்து அம்மாநில முதல்வருடன் பிரதமர் பேசினார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2021 6:38PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று திரு மோடி உறுதி அளித்தார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு மோடி, “ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுடன் பேசினேன். இயன்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தேன். அனைவரின் நலம் மற்றும் பாதுகாப்புக்கு பிரார்த்தனை செய்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1773331)
வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam