பிரதமர் அலுவலகம்

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சாந்தனு நாராயண் உடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 23 SEP 2021 8:20PM by PIB Chennai

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சாந்தனு நாராயணை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 

இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

*****************

 



(Release ID: 1757435) Visitor Counter : 195