பிரதமர் அலுவலகம்
நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
14 AUG 2021 6:54PM by PIB Chennai
நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் டிவிட்டர் பதிவுகளுக்கு பதிலளித்த பிரதமர், "நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி. இயற்கை சூழல் மிகுந்த இடங்களை பாதுகாப்பது, செடி, கொடிகளின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவது மற்றும் பசுமையான பூமியை கட்டமைப்பது ஆகியவற்றில் நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் விழுமியங்களை இது மீண்டும் ஒரு முறை எடுத்துரைக்கிறது," என்று கூறியுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1745915)
வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam