பிரதமர் அலுவலகம்

தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ள நிலையில், கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது : பிரதமர்

Posted On: 06 AUG 2021 9:07PM by PIB Chennai

தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ள நிலையில், இதை மேலும் அதிகரித்து, 'அனைவருக்கும் இலவச தடுப்பூசி' திட்டத்தின் கீழ் நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது. இதை மேலும் அதிகரித்து, 'அனைவருக்கும் இலவச தடுப்பூசி' திட்டத்தின் கீழ் நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய  நம்பிக்கையுடன் உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

*****************

 



(Release ID: 1743421) Visitor Counter : 176