சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வசம் இரண்டு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு

Posted On: 17 MAY 2021 12:01PM by PIB Chennai

இரண்டு கோடிக்கும் அதிகமான (2,04,96,525) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2,94,660 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

இதுவரை, சுமார் 20 கோடி (20,76,10,230) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 18,71,13,705 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக நிலவரம் : தமிழ்நாட்டுக்கு இதுவரை 86,55,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 72,35,714 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 14,19,296 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 

சென்னை மாநகராட்சிக்கு இதுவரை 4,50,000 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. 4,50,000 தடுப்பூசி டோஸ்கள் சென்னை மாநகராட்சிவசம் கையிருப்பில் உள்ளன.

புதுச்சேரி நிலவரம் : புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 4,27,140 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 2,31,405 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,95,735 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன. மேலும் 29,890 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719266

**


(Release ID: 1719266)



(Release ID: 1719290) Visitor Counter : 187