பிரதமர் அலுவலகம்

திரு ஹோமன் பார்கோஹைனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 12 MAY 2021 12:52PM by PIB Chennai

திரு ஹோமன் பார்கோஹைனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், “அசாமிய இலக்கியம் மற்றும் இதழியலில் திரு ஹோமன் பார்கோஹைனின் உயரிய பங்களிப்பிற்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது படைப்புகள், அசாம் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மை வாய்ந்த அம்சங்களைப் பிரதிபலித்தது. அவரது மறைவினால் மிகவும் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி, என்று பிரதமர் கூறியுள்ளார்.

----



(Release ID: 1717927) Visitor Counter : 139