பிரதமர் அலுவலகம்

காட்டுத்தீ நிலவரம் பற்றி மிசோரம் முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 26 APR 2021 3:25PM by PIB Chennai

மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ நிலவரம் குறித்து, முதல்வர் திரு ஜோரம்தங்காவிடம், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கேட்டறிந்தார்.

இது குறித்து பிரதமர் திரு மோடி சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில், ‘‘ மிசோரம் முதல்வர் திரு ஜோரம்தங்காவிடம் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ நிலவரம் குறித்து கேட்டு அறிந்து கொண்டேன். இப்பிரச்னையிலிருந்து மீள, மத்திய அரசு முடிந்தளவு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என அவரிடம் உறுதியளித்தேன். மிசோரம் மக்களின் பாதுகாப்புக்காவும், நலனுக்காவும் நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம்எனக்  குறிப்பிட்டுள்ளார்

----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1714121) வருகையாளர் எண்ணிக்கை : 286