பிரதமர் அலுவலகம்

காந்தியடிகள்-பங்கபந்து டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் திறந்து வைத்தார்

Posted On: 26 MAR 2021 9:35PM by PIB Chennai

தமது இரண்டு நாள் வங்கதேசப் பயணத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோர் பற்றிய டிஜிட்டல் கண்காட்சி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனாவுடன்  இணைந்து திறந்து வைத்தார்.

தெற்காசியாவின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோரின் சிந்தனைகளும், செய்திகளும் உலகெங்கும் எதிரொலிக்கின்றன.

கண்காட்சியின் மேற்பார்வையாளரான திரு பீரத் யாஜ்நிக், தலைவர்களுக்கு கண்காட்சியை சுற்றி காட்டினார். ஷேக் ரெஹானாவும் அவர்களுடன் இணைந்துக் கொண்டார்.

------



(Release ID: 1708096) Visitor Counter : 136