பிரதமர் அலுவலகம்

உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு வன உயிரினங்களின் பாதுகாப்பில் ஈடுபடுவோருக்கு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2021 9:54AM by PIB Chennai

உலக வன உயிரின தினமான இன்று, வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காக உழைக்கும் அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வணங்கி  மரியாதை செலுத்தியுள்ளார்.

உலக வன உயிரின தினத்தன்று, வன உயிரினங்களின் பாதுகாப்பில் ஈடுபடுள்ள அனைவரையும் நான் வணங்குகிறேன். சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் என பல்வேறு விலங்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் சீராக அதிகரித்து வருகின்றது. நமது காடுகளின் பாதுகாப்பையும், விலங்குகளுக்கு பாதுகாப்பான வசிப்பிடங்களையும் உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1702250) வருகையாளர் எண்ணிக்கை : 293