சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.46 லட்சமாகப் பதிவு

Posted On: 24 FEB 2021 11:13AM by PIB Chennai

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,46,907 ஆகக் குறைந்துள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.33 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 13,742 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிப்ரவரி 24, 2021 காலை 7 மணி வரை, தமிழகத்தில் 4,00,400 பேர், புதுச்சேரியில் 10,450 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,21,65,598 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2,54,356 முகாம்களில் 64,98,300 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 13,98,400 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 42,68,898 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 39-ஆம் நாளில் (பிப்ரவரி 23, 2021) 9,479 முகாம்களில் 4,20,046 பயனாளிகளுக்கு (2,79,823 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 1,40,223 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,26,702 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.25 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,218 பேரும், கேரளாவில் 4,034 பேரும், தமிழ்நாட்டில் 442 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 104 உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700354



(Release ID: 1700488) Visitor Counter : 162