சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 1.47 லட்சமாகக் குறைவு

Posted On: 23 FEB 2021 11:38AM by PIB Chennai

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் கீழ் (1,47,306)  குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.34 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 10,584 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிப்ரவரி 22, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 3,85,600 பேர், புதுச்சேரியில் 10,337 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,17,45,552 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2,44,877 முகாம்களில் 64,51,251 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 12,58,177 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 40,36,124 முன்கள ஊழியர்களுக்கும்  (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 38-ஆம் நாளில் (பிப்ரவரி 22, 2021) 12,560 முகாம்களில் 6,28,696 பயனாளிகளுக்கு (3,38,373 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 2,90,323 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,12,665 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.22 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,210 பேரும், கேரளாவில் 2,212 பேரும், தமிழ்நாட்டில் 449 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 78 உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700115


(Release ID: 1700115)



(Release ID: 1700334) Visitor Counter : 193