மத்திய அமைச்சரவை

இந்தியா, லக்சம்பர்க் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான செபியின் திட்டமுன்வரைவு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 09 DEC 2020 3:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி), லக்சம்பர்க் நாட்டின் நிதி ஆணையமான சிஎஸ்எஸ்எஃப் ஆகியவற்றுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான செபி நிறுவனத்தின் திட்டமுன்வரைவுக்கு  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் பரஸ்பர உதவிகள், இந்தியா, லக்சம்பர்க் நாடுகளின் பங்குச் சந்தை தொடர்பான சட்டங்கள், ஒழுங்குமுறைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679347

*****

 (Release ID: 1679347)


(வெளியீட்டு அடையாள எண்: 1679383) வருகையாளர் எண்ணிக்கை : 241