பிரதமர் அலுவலகம்

கொடி நாளை முன்னிட்டு பிரதமர் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்

Posted On: 07 DEC 2020 11:32AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, கொடி நாளான இன்று பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “நமது பாதுகாப்புப் படையினருக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கொடி நாள் விளங்குகிறது. அவர்களின் வீரமிக்க பணியையும், சுயநலமற்ற தியாகத்தையும் எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது.

நமது பாதுகாப்புப் படையினரின் நலனுக்காக உங்களின் பங்களிப்பை அளியுங்கள். இந்தச் செயல், நமது வீரமிக்க பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும்” என்று கூறியுள்ளார்.

 

***



(Release ID: 1678779) Visitor Counter : 114