பிரதமர் அலுவலகம்

அசாம் முன்னாள் முதல்வர் திரு தருண் கோகாய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 23 NOV 2020 6:32PM by PIB Chennai

அசாம் முன்னாள் முதல்வர் திரு தருண் கோகாய் மறைவிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி  தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “திரு தருண் கோகாய் அவர்கள் அசாம் மற்றும் மத்திய அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட புகழ்பெற்ற தலைவராகவும், முதுபெரும் நிர்வாகியுமாகவும் திகழ்ந்தார். அவரது மறைவினால் மன வேதனையில் உள்ளேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”, என்று குறிப்பிட்டுள்ளார்.

-----



(Release ID: 1675125) Visitor Counter : 144