உள்துறை அமைச்சகம்

குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை அன்று ஒரு நாள் துக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2020 12:43PM by PIB Chennai

குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 செப்டம்பர் 29 அன்று மறைந்தார். மறைந்த அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தேசிய கொடி வழக்கமாக பறக்கும் நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் அன்று அது அரை கம்பத்தில் பறக்கும். அன்றைய தினம் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.

 

*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1661305) வருகையாளர் எண்ணிக்கை : 201