சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19: கடந்த 24 மணி நேரத்தில் 65,081 நபர்கள் இந்தியாவில் குணமடைந்துள்ளனர், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா முதல் 5 இடங்களில் உள்ளன

Posted On: 01 SEP 2020 1:43PM by PIB Chennai

இந்தியாவில் கடந்த ஐந்து நாட்களாக தினமும் 60,000-க்கும் அதிகமான நபர்கள் கொவிட்-19-இல் இருந்து குணமடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 65,091 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,39,882 ஆக அதிகரித்து, குணமடைதல் விகிதத்தை 77 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 

ஜூலை முதல் வாரத்தில் இருந்து ஆகஸ்டு கடைசி வாரம் வரை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில், ஐந்து மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கண்டன. அதே சமயம், இதே ஐந்து மாநிலங்கள் தான் குணமடைவோரின் எண்ணிகையிலும் முன்னணியில் உள்ளன. அவை

மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகும்.

 

பாதிப்புகளின் எண்ணிக்கை: மகாராஷ்டிரா-11,852; ஆந்திரப் பிரதேசம்- 10,004; கர்நாடகா-6,495; தமிழ்நாடு- 5,956 மற்றும் உத்திரப் பிரதேசம்-4,782.

 

குணமடைந்தோரின் எண்ணிக்கை: மகாராஷ்டிரா-11,158; ஆந்திரப் பிரதேசம்- 8,772; கர்நாடகா-7,238; தமிழ்நாடு- 6,008 மற்றும் உத்திரப் பிரதேசம்-4,597.

 

                                                                            ***

 



(Release ID: 1650389) Visitor Counter : 178