பிரதமர் அலுவலகம்

தெலுங்கு மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 AUG 2020 6:54PM by PIB Chennai

தெலுங்கு மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தெலுங்கு மொழி தின வாழ்த்துகள். தெலுங்கு மொழியை, குறிப்பாக இளைஞர்களிடம் பிரபலமடையச் செய்து கொண்டிருக்கும் அனைவரையும் இன்று நாம் பாராட்டுகிறோம். பல தலைமுறைகளின் மீது நீடித்து நிலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனைகள், எழுத்துக்கள் மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு சொந்தக்காரரான உயர்திரு.கிடுகு வெங்கடராம மூர்த்திக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1649754) வருகையாளர் எண்ணிக்கை : 187