சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் -19 அண்மை நிலவரம்


கோவிட் -19 பரிசோதனைகள், நாளொன்றுக்கு 2 லட்சம்
உச்சவரம்பைத் தாண்டியது.
கோவிட் -19 ஆய்வகத் திறன் 1000 -த்தை தொட்டது

Posted On: 24 JUN 2020 3:05PM by PIB Chennai

நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை வசதிகளில் குறிப்பிடத்தக்க ஏற்றமாக நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டிருப்பது, இதுவரை இல்லாத அளவில் உயர்ந்த எண்ணிக்கையாகும்.

நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 2,15,195 மாதிரிகளையும் சேர்த்து, இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 73,52,911 ஆகும். அரசு ஆய்வகங்களில், 1,71,587 மாதிரிகளும், தனியார் ஆய்வகங்களில், 43,608 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன. இந்த அளவுடன் தனியார் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு உயர்ந்த அளவை எட்டியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றைக் கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக எப்போதும் அதிகரித்து வருவதற்கு சான்றாக நாடெங்கும், இந்தியா தற்போது 1000 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. இதில் அரசு துறையில் 730-ம் மற்றும்  தனியார் துறையில் 270 ஆய்வகங்களும் அடங்கும் .

பிரிவு வாரியாக அதன் விவரம் கீழே:

  • நிகழ்நேர ஆர்டி பி.சி.ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 557 (அரசு: 359 + தனியார்: 198).
  • ட்ரூநாட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 363 (அரசு: 343 + தனியார்: 20).
  • சிபஎன்ஏஏடி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 80 (அரசு: 28 + தனியார்: 52).

குணமடைந்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 10,495 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,58,684 நோயாளிகள் குனப்படுத்தப்பட்டுள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 56.71%  ஆகும்.

தற்போது, ​​மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் 1,83,022 பேர் உள்ளதால் அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

 



(Release ID: 1633930) Visitor Counter : 183