பிரதமர் அலுவலகம்

இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 23 MAR 2020 12:00PM by PIB Chennai

கோவிட் - 19 தீவிர நோய்த் தொற்று பாதிப்பு சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்காக ஏர் இந்தியாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``துணிசச்சலை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை வெளிக்காட்ட வேண்டிய தருணத்தில் கை கொடுத்த ஏர் இந்தியா (@airindiain) நிறுவனத்தின் குழுக்கள் குறித்து மிகுந்த பெருமை அடைகிறேன். தனித்துவமான அவர்களுடைய முயற்சிகளுக்கு நாடு முழுக்க ஏராளமான மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். #IndiaFightsCorona''

 

*****



(Release ID: 1607725) Visitor Counter : 199